Saturday, February 22, 2014

புகைப்படம்

நெஞ்சை புகையவிட்டு போனவள்
மீண்டும் பார்வையில் புகைப்படத்தின் வாயிலாய்
எரியாத இதயத்தை அணைப்பதற்கு
கண்ணீர் கண்களின் வாயிலாய்
மாற்றுவதற்கு மனமில்லை
சிந்தனை என்வசமில்லை

மறதியெண்ணும் மாயை  உன்னை மரிக்கவும் இல்லை
முழுவதாக உன் நினைப்பை நான் அழிக்கவும் இல்லை
என் முச்சு காற்று இன்னும் முடியவும் இல்லை
அதனால தானோ இன்னும் இத்தனை தொல்லை

முழுவதும் மறப்பதற்கு மார்க்கமும் இல்லை 
முயன்றேன்  பலமுறை பலன் ஏதும் இல்லை 
இன்றளவும் முயற்சியை நான் கைவிடவும் இல்லை 
இனி என்  வாழ்வில் உனக்கு இடமே இல்லை

தொலைந்த புத்தகத்தின் தொலையாத சில தொகுப்புகள்  - NavaS

No comments:

Post a Comment