Wednesday, November 5, 2014

காதல் யுத்தம்

இரு நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது அவள்
காட்டிய வெள்ளை கொடியில் !!!

செந்நிற வானம் வெண்ணிறம் ஆனதும்
வெண்மதி வந்து பகலில் சிரித்ததும்
சுற்றும் பூமியில் நான் சுற்றம் மறந்ததும்
உன்னை காணாமல் அந்த காலம் தடுத்ததும்
யாருமறியாமல் கண்கள் கண்ணீர் விடுத்ததும்
உயிர் அணுக்கள் அனைத்தும் உன் பெயர் சொல்லி துடித்ததும்

இரு நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது அவள்
காட்டிய வெள்ளை கொடியில் !!!

உன் சிட்டு சிரிப்பில் நான் என்னை இழந்ததும்
உன் ஒட்டு நிழலில் நான் உயிர் வாழ துடித்ததும்
உன்னை பார்த்தவுடன்  நான் என்னை இழந்ததும்
நீ இல்லையென்ற வார்த்தை கூட கசப்பதும்
இந்த நீண்ட யுத்தமும் முடிவு பெறும்
அவள் காட்டிய வெள்ளை கொடியில் !!!



Saturday, February 22, 2014

புகைப்படம்

நெஞ்சை புகையவிட்டு போனவள்
மீண்டும் பார்வையில் புகைப்படத்தின் வாயிலாய்
எரியாத இதயத்தை அணைப்பதற்கு
கண்ணீர் கண்களின் வாயிலாய்
மாற்றுவதற்கு மனமில்லை
சிந்தனை என்வசமில்லை

மறதியெண்ணும் மாயை  உன்னை மரிக்கவும் இல்லை
முழுவதாக உன் நினைப்பை நான் அழிக்கவும் இல்லை
என் முச்சு காற்று இன்னும் முடியவும் இல்லை
அதனால தானோ இன்னும் இத்தனை தொல்லை

முழுவதும் மறப்பதற்கு மார்க்கமும் இல்லை 
முயன்றேன்  பலமுறை பலன் ஏதும் இல்லை 
இன்றளவும் முயற்சியை நான் கைவிடவும் இல்லை 
இனி என்  வாழ்வில் உனக்கு இடமே இல்லை

தொலைந்த புத்தகத்தின் தொலையாத சில தொகுப்புகள்  - NavaS

Tuesday, February 19, 2013

இசை

நீ மௌனித்திருக்கும்  அந்த  நொடியிலும் என்  மனம் குதுக்களிப்பதேன்
உன் மூச்சு காற்றின் இசையில்  மெய்  மறந்ததலோ !!!

Monday, February 11, 2013

துணி பூக்கள்

வெறும் செடியிலும், கொடியிலும் பூத்த பூக்கள், வெட்கப்பட்டன

முதன் முறையாக, உன் சுடிதாரில் பூத்த பூக்களின் அழகில் :)

Thursday, June 28, 2012

கற்சிலை

விலங்கிளிட்டாய் உன் விழிகளால்
சிறையாவேன்  என்று நம்பினேன்,
சிலையானேன் !!!

அணைக்கத்தான் என்று மகிழ்ந்திருந்தேன்,
சிதைக்கத்தான் என பின்பு  உணர்ந்தேன்.

விதியின் வழி உன் விழி தானோ,
உடைந்த கற்களின் வழி புலம்புதடி என் உயிரே !! 

Wednesday, September 7, 2011

குடை

என் வருகையின்மையே உணர்ந்து வந்து போய் கொண்டு இருக்கிறாய்
என்னவனை எளிதில் அடையும் முயற்சியாய் !

விடை தெரியா வினாக்கள்

முற்று பெறா நம் நட்பு முடிவானது எப்போது ?
விடை தெரியா வினாக்களில் விளையாட்டாய் ஒன்று !